தொடர் மழையால் ஏற்பட்டுள்ள சிக்கல் : UAEக்கான விமானங்கள் இரத்து!

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கான விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விமான நிலைய அதிகாரசபையின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், உள்வரும் ஐந்து விமானங்கள் ஒரே இரவில் திருப்பி விடப்பட்டன. மற்றும் புறப்பட்ட இருந்த விமானங்களும் இரத்து செய்யப்பட்டுள்ள” எனத் தெரிவித்துள்ளார்.
தொடர்மழையினால் எமிரேட்ஸின் விமான நிலையத்தில் தண்ணீர் தேங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதனை வெளியேற்ற 22 பம்புகள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
கடும் மழை காரணமாக குடியிருப்பாளர்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுதுள்ளனர்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு ஏற்பட்ட வெள்ளம் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வடிகால் அமைப்புகளை விரைவாக மூழ்கடித்தமை குறிப்பிடத்தக்கது.
(Visited 10 times, 1 visits today)