திருகோணமலை பிரச்சினை: நாமலின் நிலைப்பாடு அறிவிப்பு!
திருகோணமலை பிரச்சினையை இனவாத பிரச்சினையாக மாற்றுவதற்கு இடமளிக்காதீர். அரசாங்கம் உடனடியாக தலையிட்டு பேச்சு நடத்தி பிரச்சினையை சுமூகமாக தீர்த்து வைக்க வேண்டும்.” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று திருகோணமலை சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ திருகோணமலையில் விகாரை பிரச்சினை ஏற்பட்டுள்ளது. புத்தர் சிலையை பாதுகாப்புக்காகவே அது வெளியில் எடுக்கப்பட்டது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டார். ஆனால் பொலிஸாரின் தாக்குதலில் இரு பிக்குகள் காயம் அடைந்துள்ளனர்.
இது 1952 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டு 2004 இல் புனித பூமியாக்கப்பட்டுள்ளது. கிழக்கில் பழமையான அறநெறி பாடசாலையும் இங்குள்ளது.
எனவே, அரசாங்கம் உடனடியாக தலையிட்டு பேச்சு நடத்த வேண்டும். இதனை இனவாத பிரச்சினையாக மாறுவதற்கு இடமளிக்ககூடாது. இரு தரப்பினரையும் அழைத்து பேச்சு நடத்தி தீர்வை வழங்க வேண்டும்.” என்றார் நாமல் ராஜபக்ச.





