திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் – இனவாதமாக சித்தரிக்கும் முயற்சி
திருகோணமலையில் நிகழ்ந்த சம்பவத்தை இனவாத அல்லது மதவாத அசம்பாவிதமாகச் சித்தரித்துக் காட்டச் சில சக்திகள் முயல்வதாக பிரதியமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.
இது முற்றிலும் நீதிமன்ற விவகாரம் என்றும், இந்தச் சம்பவத்தில் அரசாங்கத்தின் தலையீடு கிடையாது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
நீதிமன்றத்தின் சுதந்திரத்தை வலுவாகப் பாதுகாக்கும் அரசாங்கம் தற்போது ஆட்சியில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் சுசந்த தொடாவத்த உரையாற்றுகையில், நாட்டில் நவீன சிறைச்சாலை வலைப்பின்னலை நிர்மாணிப்பதற்கு வரவு செலவுத் திட்டத்தின் மூலம் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
அத்துடன், நீதிமன்றங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யப் பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
எதிர்காலத்தில் ஒட்டுமொத்த நீதிமன்ற நடைமுறையிலும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தக்கூடியதாக இருக்கும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் நம்பிக்கை தெரிவித்தார்.





