இலங்கை செய்தி

திருகோணமலை மட்டக்களப்பு வீதி புனரமைப்பு பணிகள் தீவிரம்!!

திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதி இறால் குழி பகுதியை புனரமைக்கும் பணிகள் இன்று (03) காலை முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கடந்த சில நாட்களாக திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதியினூடாக போக்குவரத்து நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்த நிலையில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா அவர்களின் கண்காணிப்பின் கீழ் வேகமாக புனரமைப்பு பணிகள் இடம்பெற்று வருகின்றது.

இதேவேளை குறித்த வீதியின் ஊடாக மோட்டார் சைக்கிள் முற்சக்கர வண்டிகள் பயணிக்கின்ற போதிலும் பஸ் போக்குவரத்துக்கள் இன்னும் இடம்பெறவில்லை.

அதேவேளை திருகோணமலை புல்மோட்டை பிரதான வீதி யான் ஓயா பாலத்துக்கு அருகில் உடைந்த நிலையில் காணப்பட்ட வீதி புனரமைப்பு பணிகள் நேற்று முதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதும் குறிப்பிடத்தக்கது.

குறித்த வீதிகளின் ஊடாக நாளை முதல் பயணம் செய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுவதாக பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்தார்.

AJ

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!