இலங்கை செய்தி

கனடாவில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையர்களுக்கு அஞ்சலி

கனடாவில் படுகொலை செய்யப்பட்ட இலங்கை குடும்பத்தின் நினைவேந்தல் நிகழ்வு ஒட்டாவாவின் புறநகர் பகுதியான Barrhaven இல் உள்ள விக்கிரமசிங்க குடும்பத்தின் வீட்டிற்கு அருகிலுள்ள பூங்கா ஒன்றில் சனிக்கிழமை (9) பிற்பகல் நடைபெற்றது.

இதில் மகா சங்கரத்னா, உள்ளூர்வாசிகள், இருநாட்டு அரசு அதிகாரிகள் உட்பட கிட்டத்தட்ட 300 பேர் கலந்து கொண்டனர்.

விக்கிரமசிங்கவின் குடும்பத்தின் நண்பர்கள் மற்றும் உள்ளூர் கனேடியர்கள் இந்த அனர்த்தத்தால் மிகவும் சோகமடைந்ததுடன் சிலர் கண்ணீர் சிந்தியதையும் காணமுடிந்தது.

இதேவேளை, பாரிய படுகொலையில் கொல்லப்பட்ட இலங்கையர்களின் உறவினர்கள் அடுத்த சில நாட்களில் நாட்டை வந்தடைந்த பின்னர் இறுதிச் சடங்குகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக கனடாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஹர்ஷ நவரத்ன தெரிவித்துள்ளார்.

கடந்த 6ஆம் திகதி இரவு கனடாவின் ஒட்டாவாவின் புறநகர் பகுதியான Barhaven என்ற இடத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 06 இலங்கையர்கள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

தாக்குதலில் உயிர் பிழைத்து பலத்த காயங்களுக்கு உள்ளான தனுஷ்க விக்கிரமசிங்க தற்போது இரண்டு சத்திரசிகிச்சைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இதேவேளை, பாதுகாப்பு சட்டத்தரணி மைக்கல் ஜோன்ஸ்டன் பின்வருமாறு கருத்து வெளியிட்டிருந்தார்.

“இந்த சம்பவத்தின் இழிவான தன்மை காரணமாக, ஒருவரின் மனநலம் குறித்து ஒருவர் கேள்வி எழுப்பலாம்.

குற்றம் சாட்டப்பட்டவர் விசாரணைக்கு வருவதற்கு தகுதியானவர் என்பதை தீர்மானிக்கவும் இது உதவும். இந்தக் குற்றச்சாட்டுகளுக்குக் காரணமான மனநலக் கோளாறு உள்ளதா இல்லையா என்பதையும் கண்டறிய முடியும்.”

(Visited 3 times, 1 visits today)
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content