ஐரோப்பா செய்தி

தியாக தீபம் திலீபனுக்கு பிரித்தானியாவில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு

தமிழர் தாயகம் இன்று செப்டெம்பர் 26ஆம் நாள் தியாக தீபம் திலீபனின் நினைவுகளோடு நிமிர்ந்து நிற்கின்றது.

இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் உலகெங்கும் தமிழர்கள் வாழும் பகுதிகளில் தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

யாழ்ப்பாணம் நல்லூரில் கொட்டும் மழையிலும் தீபம் திலீபனுக்கு தமிழ் மக்கள் வணக்கம் செலுத்தினர். அதேபோன்று வடக்கு, கிழக்கில் பல பகுதிகளில் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

பிரித்தானியாவின் தலைநகரிலும் அரசியல், விழிப்புணர்வுப் போராட்டம் இன்று இடம்பெற்றது.

பிரித்தானியாவில் Downing Street, London, SW1A 2AA என்னும் முகவரியிலமைந்துள்ள பிரதமர் செயலகம் முன்பாகக் காலை 11 மணிக்குத் தேசியக் கொடிகள் ஏற்றுதலோடு தொடங்கப்பட்ட விழிப்புணர்வுப் போராட்டமானது மாலை 5 மணி வரை நடைபெற்றது.

தேசியக் கொடிகள் ஏற்றி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து தியாக தீபத்திற்கான ஈகச்சுடர் ஏற்றப்பட்டு, மலர் மாலை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.

இன்று மாலை 5 மணிக்கு அஞ்சலி நிகழ்வு நிறைவுற்றதுடன், வணக்கம் செலுத்தும் நிகழ்வில் தமிழ் மக்கள் பெருந்திரளாக திரண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தியதுடன், எழுச்சி உரைகளும் இடன்பெற்றன.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!