இலங்கை செய்தி

கொழும்பில் வீதிகளின் இருபுறமும் உள்ள மரங்களை வெட்ட முடியாது

கொழும்பில் வீதிகளின் இருபுறமும் உள்ள பல வருடங்கள் பழமையான மரங்களை முற்றாக வெட்ட முடியாது என கொழும்பு மாநகர ஆணையாளர் பத்ராணி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

வீதியோரங்களில் உள்ள நாற்பது வருடங்களுக்கும் மேலான மரங்கள் ஆபத்தானவை என இனங்காணப்பட்டுள்ள போதிலும் அவை தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் நிபுணர்களின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சாலை ஓரங்களில் உள்ள பாதுகாப்பற்ற மரங்களை வெட்டி சமன் செய்வதே தவிர, மரங்களை வெட்டி பாலைவனமாக்க வழியில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், அண்மையில் பேருந்து மீது மரம் விழுந்து 5 பேர் உயிரிழந்த சம்பவத்துடன், வீதியோரங்களில் அபாய நிலையில் உள்ள பாரிய மரங்களை உடனடியாக அகற்றுமாறு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் பணிப்புரை விடுத்துள்ளார்.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!