இலங்கை

திறைசேரி உண்டியல்கள் ஏலம்விடும் திகதியில் மாற்றம்! இலங்கை மத்திய வங்கி

ஒரு இலட்சத்து 40 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் எதிர்வரும் 10ஆம் திகதி ஏலத்தின் மூலம் வழங்கப்படவுள்ளது.

இந்த ஏலத்திற்கான திறைசேரி உண்டியலின் தீர்ப்பனவு திகதி ஜூலை மாதம் 4 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

முன்னதாக இந்த ஏலத்திற்கான தீர்ப்பனவு திகதியாக எதிர்வரும் 30ஆம் திகதி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த திகதி மாற்றப்பட்டுள்ளது.

பொது நிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு எதிர்வரும் 30ஆம் திகதி விசேட வங்கி விடுமுறையை பிரகடனப்படுத்தியுள்ள நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இதன்படி, எதிர்வரும் 27ஆம் திகதி நடத்தப்படவிருந்த திறைசேரி உண்டியல் தீர்ப்பனவு திகதி ஜூலை 4ஆம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!