ஐரோப்பா

கிரிமியா தலைநகர் பகுதில் ரயில் சேவைகள் நிறுத்தம

கிரிமியாவில் இன்று காலை குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளதை அடுத்து  ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

கிரிமியாவின்  தலைநகரான சிம்ஃபெரோபோல் மற்றும் செவஸ்டோபோல் நகருக்கு இடையேயான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக  பிராந்தியத்தின் ரஷ்ய தலைவர் கூறினார்.

இதேவேளை இந்த வெடிப்பு சம்பவத்தில், தானியங்கள் ஏற்றப்பட்ட சரக்கு ரயில் பெட்டிகள் தடம் புரண்டதாகவும், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரிமியா 2014 இல் ரஷ்யாவால் சட்டவிரோதமாக கைப்பற்றப்பட்டது.  உக்ரைன் அதை திரும்பப் பெற போராடுவதாகக் கூறியது, இருப்பினும் இது மிகவும் கடினமாக இருக்கும் என்று பெரும்பாலான ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

(Visited 11 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்