இலங்கையில் ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பின!
இலங்கை போக்குவரத்து அமைச்சருடனான கலந்துரையாடலின் பின்னர், வேலை நிறுத்தத்தை கைவிட ரயில்வே தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
போக்குவரத்து அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன மற்றும் ரயில் சாரதிகள் தொழிற்சங்கங்களுக்கு இடையிலான இந்த கலந்துரையாடல் போக்குவரத்து அமைச்சில் இடம்பெற்றுள்ளது.
இரண்டாம் வகுப்பு பதவி உயர்வு தாமதம், ஆட்சேர்ப்பு தாமதம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, இன்ஜின் இயக்க பொறியாளர்கள் சங்கத்தின் இன்ஜின் டிரைவர்கள் குழு இந்த வேலை நிறுத்தத்தை தொடங்கியது.
(Visited 11 times, 1 visits today)





