இலங்கை

இலங்கையில் பணிப்புறக்கணிப்பால் வேலையை இழந்த தொடருந்து ஊழியர்கள்!

கடமைக்குத் திரும்பாத தொடருந்து நிலைய அதிபர்கள் உள்ளிட்ட தொடருந்து திணைக்கள அலுவலர்கள், பணியிடை விலகியவர்களாக கருதி, கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

தொடருந்து திணைக்கள பொது முகாமையாளரால், தொடருந்து நிலையங்களின் அதிபர்களுக்கு இந்தக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகப் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

புகையிரத சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக கருதப்பட்ட போதிலும் தொழிற்சங்க நடவடிக்கையில் கலந்து கொண்ட நிலைய அதிபர்கள் மற்றும் புகையிரத கட்டுப்பாட்டாளர்களின் பதவிகளை நீக்குவதாக அறிவிக்கும் 1000 கடிதங்கள் வழங்கப்படுவதற்கு தயாராக உள்ளன.

நேற்றையதினம் 12 மணிக்குள் கடமைக்குத் திரும்பாதவர்கள் பணியிடை விலகியவர்களாகக் கருதப்படுவார்கள் என்று அரசாங்கம் அறிவித்திருந்த நிலையில் நேற்று மதியம் 12 மணிக்குள் கடமைக்கு திரும்பாத தொடருந்து திணைக்களப் பணியாளர்கள் அனைவரும் பதவி விலகியவர்களாகக் கருதப்பட்டு, அவர்களுக்கான கடிதங்கள் இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

(Visited 13 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!