இந்தியா

இந்தியாவில் தொடருந்து சாரதிகள் இளநீர் அருந்துவதற்கு தடை

இந்தியாவில் தொடருந்து சாரதிகள் பணிக்கு முன் அல்லது பணிநேரத்தில் இளநீர் மற்றும் ஹோமியோபதி மருந்துகளை பயன்படுத்துவதற்கு தொடருந்து திணைக்களம் தடைவிதித்துள்ளது.

மேலும் பணிக்கு வரும் போதும் பணி முடிந்து போகும் போது இளநீர், இருமல் மருந்துகள், குளிர்பானங்கள் மற்றும் வாய் புத்துணர்ச்சியூட்டிகள் என்பவற்றை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

தொடருந்து சாரதிகள் மது அருந்தியுள்ளார்களா என்பதை பரிசோதனை செய்யும்போது, சிலருக்கு ஆல்கஹால் பரிசோதனை கருவிகளில் அவர்களின் உடலில் ஆல்கஹாலின் அளவு அதிகமாக காட்டுகிறது.

ஆனால் இரத்தப் பரிசோதனைகளில் ஆல்கஹால் தடயங்கள் எதுவும் இல்லை.

தொடருந்து சாரதிகள் இளநீர், பழங்கள், இருமல்மருந்து, குளிர்பானங்கள் என்பவற்றை எடுத்துக்கொள்கின்றமையே இதற்கு காரணம் என கூறப்படுகிறது

இதன் காரணமாக தொடருந்து சாரதிகள் பணிநேரத்தில் இதுபோன்ற பானங்கள் அருந்துவதற்கு தொடருந்து திணைக்களம் தடைவிதித்துள்ளது.

TJenitha

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!