இலங்கை

இலங்கையில் கோர விபத்து – ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் பரிதாபமாக பலி

குளியாபிட்டிய – கம்புராபொல பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்தனர்.

புஜ்கமுவ ஓயாவில் ஜீப் ரக வாகனமொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

குருநாகல் – கொபெய்கனே பகுதியைச் சேர்ந்த 25 மற்றும் 27 வயதுடைய இருவரே இந்த விபத்தில் உயிரிழந்தனர்.

நீர்கொழும்பு பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்றதன் பின்னர் அவர்கள் மீண்டும் வீடு திரும்பிய போது இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கட்டுப்பாட்டை இழந்து வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

(Visited 2 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்