ஐரோப்பா

துருக்கியில் அறுவை சிகிச்சை செய்த பிரித்தானிய பெண்ணுக்கு நேர்ந்த துயரம்!

துருக்கியில் பட் லிப்ட் அறுவை சிகிச்சைக்குப் பின் இறந்த பிரிட்டிஷ் தாய் ஒருவரின் சில உறுப்புகள் காணாமல் போயுள்ளதாகக் கூறப்படுகிறது.

38 வயதான Kaydell Brown என்ற பெண் பட் லிப்ட் அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளார். இதற்காக அவர் £ 5,400 செலவழித்துள்ளார்.
துருக்கியின் இஸ்தான்புல்லில் உள்ள ஒரு கிளினிக்கில் நடைமுறைகளை அவர் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது
ஆனால் அறுவை சிகிச்சைக்கு பிறகு அவர் துரதிஸ்டவசமாக உயிரிழந்துள்ளார். இந்நிலையில் கெய்டலின் உடல் உறுப்புகளின் பகுதிகள் காணாமல் போனதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும் ஆனால் உடல் “தீண்டப்படாமல்” ஒப்படைக்கப்பட்டதாக மருத்துவமனை கூறுகிறது.
இது குறித்து கருத்துவெளியிட்டுள்ள அவரது சகோதரி லீன், தனது சகோதரி இறந்துவிட்டதைப் பற்றி மருத்துவர்கள் தெரிவித்தபோது, ​​பணத்தைத் திரும்பப் பெறுவதற்காக தன்னிடம் ஒரு கவரைக் கொடுத்ததாகவும், அடுத்த விமானத்தில் முன்பதிவு செய்யப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
இந்த விடயம் மிகுந்த கரிசனையை ஏற்படுத்தியுள்ளதுடன், வழக்கு தொடுக்க காரணமாகியது.
இதேவேளை துருக்கியில் 2019 ஆம் ஆண்டு முதல் 28 பிரித்தானியர்கள் ஒப்பனை அறுவை சிகிச்சை செய்து இறந்துள்ளதாக வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது.
(Visited 2 times, 1 visits today)
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content