இலங்கை

இலங்கையில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் உயிரிழந்த யுவதிகள் தொடர்பில் வெளியான தகவல்

பதுளை -ஹாலிஎல – உடுவர 6ஆம் கட்டை பகுதியிலுள்ள வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இரு யுவதிகள் உயிரிழந்துள்ளனர்.

நேற்று மாலை ஹாலிஎல பிரதேசத்தில் பெய்த கன மழை காரணமாக ஹாலிஎல உடுவர 6வது மைல்கல் பகுதியில் உள்ள கந்தகொல்ல பத்தனையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதன்போது அதற்கு அருகில் இருந்த வீடொன்றில் வசித்து வந்த இரண்டு யுவதிகள் மண் சரிவில் சிக்கினர்.

ஒருவர் கெந்தகொல்லபதன உடுவரை ஹாலிஎல பகுதியை சேர்ந்த 23 வயதுடைய பெண், மற்றவர் நாபொலவத்த மத்திய வீடு ஹாலிஎல பகுதியை சேர்ந்த 20 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இவ்வாறு மண்சரிவில் சிக்கிய இரு யுவதிகளும் பதுளை பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டபோதும் அவர்கள் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!