இலங்கையில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் உயிரிழந்த யுவதிகள் தொடர்பில் வெளியான தகவல்

பதுளை -ஹாலிஎல – உடுவர 6ஆம் கட்டை பகுதியிலுள்ள வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இரு யுவதிகள் உயிரிழந்துள்ளனர்.
நேற்று மாலை ஹாலிஎல பிரதேசத்தில் பெய்த கன மழை காரணமாக ஹாலிஎல உடுவர 6வது மைல்கல் பகுதியில் உள்ள கந்தகொல்ல பத்தனையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதன்போது அதற்கு அருகில் இருந்த வீடொன்றில் வசித்து வந்த இரண்டு யுவதிகள் மண் சரிவில் சிக்கினர்.
ஒருவர் கெந்தகொல்லபதன உடுவரை ஹாலிஎல பகுதியை சேர்ந்த 23 வயதுடைய பெண், மற்றவர் நாபொலவத்த மத்திய வீடு ஹாலிஎல பகுதியை சேர்ந்த 20 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இவ்வாறு மண்சரிவில் சிக்கிய இரு யுவதிகளும் பதுளை பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டபோதும் அவர்கள் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 11 times, 1 visits today)