இலங்கை

கொழும்பில் காதல் விவகாரத்தால் ஏற்பட்ட விபரீதம் – தமிழ் இளைஞனுக்கு நேர்ந்த கதி

கொழும்பில் நேற்று தமிழ் இளைஞர் ஒருவர் கத்தியால் கழுத்தறுத்துப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

கொலன்னாவை பிரதேசத்தில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் 27 வயதுடைய சந்திரகுமார் விஜயகாந்த் என்ற நபரே உயிரிழந்துள்ளார்.

முச்சக்கர வண்டி ஒன்றில் வந்த மூவர் அடங்கிய குழுவினர், வீட்டிலிருந்த அந்த இளைஞரை வெளியே அழைத்து கத்தியால் சரமாரியாகக் குத்திவிட்டுத் தப்பியோடியுள்ளனர்.

கழுத்தில் பாரிய வெட்டுக்காயங்களுக்குள்ளான அந்த இளைஞரை அவரின் குடும்பத்தினர் உடனடியாகக் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போதிலும் அவர் உயிரிழந்துள்ளார்.

காதல் விவகாரமே இந்தக் கொலைக்குக் காரணம் என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலையாளிகளைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!