ஐரோப்பா

பிரித்தானியா செல்ல முயற்சித்த அகதி ஒருவருக்கு நேர்ந்த துயரம் -வாகனத்துக்குள் சிக்குண்டு பலி

பிரித்தானியா செல்ல முயற்சித்த அகதி ஒருவர் கனரக வாகனம் ஒன்றில் ஏற முற்பட்டு அதே வாகனத்துக்குள் சிக்குண்டு உடல் நசுங்கி உயிரிழந்துள்ளார்.

பிரான்ஸில் பா-து-கலே மாவட்டத்தின் Marck எனும் நகர்ப்பகுதியில் இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

பிரித்தானியா சென்றடையவேண்டும் எனும் முனைப்புடன் அகதி ஒருவர் ஓடிக்கொண்டிருக்கும் கனரக வாகனம் மீது பாய்ந்து ஏற முற்பட்டுள்ளார்.

இதன் போது அவர் தவறி விழுந்து வாகனத்தின் சக்கரங்களுக்குள் சிக்கி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அவர் எரிட்டேரியா நாட்டைச் சேர்ந்த அகதி என தெரிவிக்கப்படுகிறது.

விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2024 ஆம் ஆண்டில் ஆபத்தான கடற்பயணங்களினால் மட்டும் 78 அகதிகள் பலியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(Visited 18 times, 18 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்