தாய்லாந்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பிரித்தானி பிரஜைக்கு நேர்ந்த விபரீதம்!
தாய்லாந்தில் மோட்டார் சைக்கில் ஒன்று விபத்துக்குள்ளானதில் பிரித்தானிய பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
லோப்புரியில் உள்ள ஒரு மோட்டார் பாதை மேம்பாலத்தில் உள்ள கான்கிரீட் தடுப்பு மீது மோதியதில் 62 வயதான குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்த நபர் தாய்லாந்தில் சுமார் 14 ஆண்டுகளாக ஒரு பராமரிப்பாளருடன் வசித்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இங்கிலாந்தில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
(Visited 28 times, 1 visits today)





