இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

இலங்கை பொலிஸாரின் உத்தரவினால் அதிருப்த்தியில் சுற்றுலா பயணிகள்

பிரபலமான சுற்றுலாத் தலத்தில் இரவு 10 மணிக்கு இசையை நிறுத்துமாறு பொலிஸார் உத்தரவிட்டதை அடுத்து சுற்றுலாப் பயணிகள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

சமூக ஊடகங்களில் தனது அதிருப்தியை வெளிப்படுத்திய ஒரு வெளிநாட்டுப் பெண், இரவு 10 மணிக்கு இசை வாசிப்பதை நிறுத்துமாறு பொலிஸார் தனக்குத் தெரிவித்ததாக கூறியுள்ளார்.

புதிய ஜனாதிபதி இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் அளித்தால், அது இலங்கையின் சுற்றுலாத் துறைக்கு மோசமான சூழ்நிலையாக இருக்கும் என்றும் அவர் கூறுகிறார்.

இலங்கை சுற்றுலாத் துறையின் மூலம் மில்லியன் கணக்கான டொலர்களை சம்பாதித்து வரும் நேரத்தில் இதுபோன்ற நடவடிக்கைகள் பொருத்தமற்றவை என அவர் காணொளியில் குறிப்பிடுகிறார்.

அந்த இடத்தில் பல சுற்றுலாப் பயணிகள் இருப்பதை வீடியோ காட்டுகிறது. எனினும் சுற்றுலா தலம் தொடர்பாக தகவல் வெளியிடப்படவில்லை.

(Visited 5 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!