புயலுக்கு மத்தியிலும் இலங்கைக்கு படையெடுக்கும் மக்கள்!! பொருளாதாரத்தில் ஏற்பட்ட மாற்றம்!
நாட்டை உலுக்கிய சமீபத்திய புயல் நிலமையை தொடர்ந்து இலங்கையின் சுற்றுலாத்துறை மீளவும் புத்துயிர் பெற்றுள்ளது.
நேற்றைய நிலவரப்படி, 2025 ஆம் ஆண்டில் நாட்டிற்கு வருகை தந்துள்ள மொத்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 2.25 மில்லியனை எட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தித்வா சூறாவளியின் தாக்கத்தால் டிசம்பர் முதல் இரண்டு வாரங்களில் மந்தநிலை இருந்தபோதிலும் தற்போது மீளவும் சுற்றுலா துறை வளர்ச்சி பாதையில் பயணிப்பதாக புதிய புள்ளிவிபரங்கள் வெளிப்படுத்தியுள்ளன.

ஜனவரி முதல் நவம்பர் வரையிலான ஆண்டின் ஒட்டுமொத்த வருகை 2,103,593 ஆக பதிவாகியுள்ளது. இது கடந்த 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 16.6% வளர்ச்சியைக் குறிக்கிறது.
இலங்கைக்கு அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் அண்டை நாடான இந்தியாவிலிருந்து வருகை தருகிறார்கள். 2025 நவம்பரில் 51,391 இந்திய சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். இது இலங்கையின் சுற்றுலாத் துறைக்கான மிகப்பெரிய ஒற்றை சந்தையைக் குறிக்கிறது.

இந்தியாவைத் தொடர்ந்து ரஷ்யா இரண்டாவது இடத்திலும், மூன்றாவதாக பிரித்தானியாவும் உள்ளன.
இலங்கையின் சுற்றுலாத் துறை நாட்டின் பொருளாதார வளர்ச்சியை உந்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதற்கமைய கடந்த 2024 ஆம் ஆண்டில் 137.22 பில்லியன் ரூபாய் (US$19.44 பில்லியன்) வருவாயை ஈட்டியுள்ளதும் சுட்டிக்காட்டத்தக்கது.





