செய்தி வாழ்வியல்

அளவுக்கு அதிகமான இளநீர் நல்லதல்ல

இளநீர் குடிப்பது ஆரோக்கியமானது. உடலில் நீர்சத்து குறையாமல் இருக்க உதவுகிறது. இதில் உள்ள வைட்டமின் சி, வைட்டமின் ஈ, இரும்பு, கால்சியம், தாமிரம், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.

தினமும் இளநீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம். இளநீரினால் நோய் எதிர்ப்பு சக்தி வலுப்பெறுவதோடு, குடல் ஆரோக்கியத்திற்கும் பல அற்புத நன்மைகளை தருகிறது. எனினும், இளநீர் எல்லோருக்கும் ஒத்துக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதனை அளவிற்கு அதிகமாக உட்கொள்வது சிலருக்கு தீங்கு விளைவிக்கும்.

சிறுநீரக பிரச்சனை: சிறுநீரகம் தொடர்பான பிரச்சனை உள்ளவர்கள் இளநீர் அருந்துவதை தவிர்க்க வேண்டும். இளநீரில் பொட்டாசியத்தின் அளவு மிக அதிகமாக உள்ளது. இவை அளவிற்கு அதிகமாகும் போது சிறுநீரகங்களால் வடிகட்ட முடியாது. எனவே சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் இளநீரை அளவிற்கு அதிகமாக அருந்துவதைத் தவிர்க்க வேண்டும்.

சர்க்கரை நோய் உள்ளவர்களும் இளநீரை அளவிற்கு அதிகமாக அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். இதில் கிளைசெமிக் இன்டெக்ஸ் அதிகமாக உள்ளது. அதில் கார்போஹைட்ரேட்டின் அளவும் அதிகமாக உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், அதை உட்கொள்வது இரத்த சர்க்கரையின் அளவை அதிகரிக்கலாம். எனவே, நீரிழிவு நோயாளிகள் மருத்துவரிடம் கலந்தாலோசித்த பின்னரே இதை உட்கொள்ள வேண்டும்.

ஒவ்வாமை: பலருக்கு இளநீர் குடிப்பதால் அலர்ஜி பிரச்சனைகள் வரலாம். எனவே, இவர்களுக்கு இதனால் சருமத்தில் அரிப்பு மற்றும் சிவத்தல் போன்றவற்றை ஏற்படுத்தும். எனவே, இளநீரைப் பருகிய பிறகு வீக்கம் அல்லது அத்தகைய பிரச்சனை உள்ளவர்கள் அதை உட்கொள்ளக்கூடாது.

உயர் இரத்த அழுத்தம்: உயர் ரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்களும் இளநீர் அருந்துவதை தவிர்க்க வேண்டும். இதில் காணப்படும் பொட்டாசியம் BP மருந்துகளுடன் இணைந்தால் தீங்கு விளைவிக்கும்.

சளி மற்றும் இருமல்: இளநீர் குளிர்ச்சியை கொடுக்குக் கூடியது. அத்தகைய சூழ்நிலையில், சளி மற்றும் இருமல் ஏற்பட்டால், அதை அலவோடு உட்கொள்ளுங்கள் அல்லது தவிர்ப்பது நல்லது.

(Visited 3 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி