வட அமெரிக்கா

தடை காலக்கெடு நெருங்கி வரும் நிலையில் டிரம்ப்புடன் டிக்டாக் தலைமை நிர்வாகி சந்திப்பு

தேசியப் பாதுகாப்பு குறித்த கவலையால் அமெரிக்காவில் டிக்டாக் செயலி தடைசெய்யப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அமெரிக்க அதிபராகத் தேர்வுசெய்யப்பட்டுள்ள டோனல்ட் டிரம்ப்பை டிக்டாக் தலைமை நிர்வாகி சியூ சோவ் ஸி, மார் ஏ லாகோவில் திங்கட்கிழமை (டிசம்பர் 16) சந்தித்தார்.

டிக்டாக் மீது விதிக்கப்படவுள்ள தடையை எப்படியாவது நீக்க தாம் முயற்சி செய்யப்போவதாக டிரம்ப் கூறிய சில மணி நேரம் கழித்து அந்தச் சந்திப்பு நடந்தது. அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது இளம் வாக்காளர்களைச் சென்றடைய டிக்டாக் தளத்தை டிரம்ப் பயன்படுத்தினார்.

மார் ஏ லாகோவில் முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், “டிக்டாக்கை நாங்கள் ஆராயவுள்ளோம். டிக்டாக்கிற்கு என் மனதில் தனியிடம் உள்ளது,” என்றார்.

முதல் தவணையாக அதிபராக இருந்தபோது 2020ல் டிக்டாக்கிற்கு தடைவிதிக்க டிரம்ப் முயற்சி செய்திருந்தார். ஆனால், அதுகுறித்த தமது நிலைப்பாட்டை அவர் மாற்றிக்கொண்டுள்ளார்.

டிரம்ப்பும் சியூவும் எதுபற்றி பேசினர் என்பது குறித்து தெரியவில்லை. இதுபற்றி கருத்துரைக்க முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு டிக்டாக் பேச்சாளர் பதிலளிக்கவில்லை.

(Visited 9 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்
error: Content is protected !!