அறிந்திருக்க வேண்டியவை

நேபாளத்தில் டிக்டொக் செயலிக்கு தடை

நேபாளத்தில் டிக்டொக் (TikTok) செயலி தடை செய்யப்பட்டுள்ளது.

நேபாளத்தில் சமூக ஊடக நிறுவனங்கள் தங்களது தொடர்பு அலுவலகங்களை நிறுவ வேண்டும் என்ற புதிய விதி அறிமுகப்படுத்தபட்டு சில நாட்களில் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நேபாளத்தில் டிக்டொக் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைப்பதாக தெரிவித்து எத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மாதாந்தம் ஒரு பில்லியன் பயனாளர்களை கொண்டுள்ள டிக்டொக் செயலி இந்தியா உட்பட பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது.

நேபாளத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் 1,600க்கும் மேற்பட்ட டிக்டாக் தொடர்பான சைபர் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

 

TJenitha

About Author

You may also like

அறிந்திருக்க வேண்டியவை

பூமியின் உள் மையத்தின் ரகசியம் அம்பலம்!

பூமியின் உட்புறத்தில் என்ன இருக்கிறது என்ற கேள்விகளுக்கான விடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விஞ்ஞான வளர்ச்சி ஏற்படும்போது மேலும் ஆழமாகவும், விரிவாகவும் கேட்கபடுகிறது. கேள்விகள் கேட்பதும் அதற்கான பதிலை தேடுவதும்
அறிந்திருக்க வேண்டியவை

ChatGPTக்குப் போட்டியாக Google எடுத்த அதிரடி நடவடிக்கை

Google நிறுவனம் ChatGPTக்குப் போட்டியாக புதிய செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் வாயிலாகச் செயல்படும் கலந்துரையாடல் செயலியை Google அறிமுகம் செய்யவுள்ளது.
error: Content is protected !!