இலங்கை

இலங்கை முழுவதும் தீவிர பாதுகாப்பு – 90,000 உத்தியோகத்தர்கள் கடமையில்

இன்று இடம்பெறுகின்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கான சகல பாதுகாப்பு ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சுமார் 90, 000 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

63, 145 பொலிஸார் நேரடியாகத் தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன் பொலிஸ் விசேட அதிரடிப் படையைச் சேர்ந்த 3, 200 உத்தியோகத்தர்களும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன் பாதுகாப்பு கடமைகளில் முப்படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சில பகுதிகளில் பொலிஸாருடன் இராணுவத்தினரும் பாதுகாப்பு கடமைகளில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

அதேபோன்று 12, 000 இற்கும் அதிகமான சிவில் பாதுகாப்பு அதிகாரிகளும் கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 3000 இற்கும் அதிகமான காவல்துறை குழுக்கள் நடமாடும் சோதனை நடவடிக்கைகளுக்காகக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!