திபெத் நிலநடுக்கம் : பலி எண்ணிக்கை 95 ஆக உயர்வு!
திபெத்தின் புனித நகருக்கு அருகில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 95 ஆக அதிகரித்துள்ளது.
100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
திபெத்தின் ஷிகாட்சே நகரில் உள்ள டிங்ரி கவுண்டியில் காலை 9 மணிக்குப் பிறகு 10 கிலோமீட்டர் ஆழத்தில் 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று சீனா பூகம்ப வலையமைப்பு மையம் தெரிவித்துள்ளது.
(Visited 55 times, 1 visits today)





