இலங்கை

வாகனத்தை வழிமறித்து சாரதியை தாக்கிய குற்றச்சாட்டில் இளைஞர்கள் மூவர் கைது

பட்டா ரக வாகனத்தை வழிமறித்து , அதன் சாரதியை கடுமையாக தாக்கிய குற்றச்சாட்டில் 03 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை , உயரப்புலம் பகுதியில் கடந்த திங்கட்கிழமை இரவு வீதியில் பயணித்த பட்டா ரக வாகனத்தை மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் அடங்கிய கும்பல் வழி மறித்து , சாரதியை சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்று இருந்தது.

சம்பவத்தில் காயமடைந்த சாரதி , சிகிச்சைக்காக யாழ்,போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த மானிப்பாய் பொலிஸார் , தாக்குதலை மேற்கொண்ட குற்றச்சாட்டில் மானிப்பாய், கல்வியங்காடு மற்றும் மணியந்தோட்டம் பகுதிகளை சேர்ந்த மூன்று இளைஞர்களை நேற்று முன் தினம் செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனர்.

(Visited 16 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்