இலங்கை செய்தி

ஹஜ் கடமைக்காக சென்ற மூன்று இலங்கையர்கள் உயிரிழப்பு

இம்முறை ஹஜ் கடமைக்காக சென்ற மூன்று இலங்கையர்கள் அங்கு மரணித்துள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நேற்றையதினம் (04) கொலன்னாவையை சேர்ந்த ஹாஜியானி ஒருவர் மாரடைப்பு காரணமாக மக்காவில் மரணித்துள்ளதுடன் கொழும்பு 14-ஐ சேர்ந்த ஹாஜி ஒருவர் மதீனாவில் இடம்பெற்ற விபத்தொன்றின் போது மரணித்ததாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கடந்த வாரம் குருணாகலை – பானகமுவ பகுதியை சேர்ந்த ஹாஜி ஒருவர் மாரடைப்பு காரணமாக மினாவில் உயிரிழந்துள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது.

இம்முறை சுமார் 3500 பேர் ஹஜ் கடமைக்காக இலங்கையில் இருந்து சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

(Visited 17 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை