இலங்கை செய்தி

இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட மூன்று இலங்கை தமிழர்கள்!

இலங்கையில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய மூன்று பேரை இந்திய அரசாங்கம் நாடு கடத்தியுள்ளது.

இசைவேந்தன், யோகராசா, சுஜீவன் ஆகிய மூன்று பேரே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

அவர்கள் மூவரும் இலங்கையை வந்தடைந்த நிலையில், பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மூவரும் கடந்த  15 நாட்களுக்கு முன்னர் சட்டவிரோதமாக தமிழ்நாட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு சென்னை மண்ணடியில் தங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்களிடம்  இந்தியாவில்  தங்குவதற்கான எந்த ஆவணமும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இந்திய அரசாங்கம் அவர்களை நாடுகடத்தியுள்ளது.

மேலும், அவர்கள் மூன்று பேர் மீதும் இலங்கையில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் வல்வெட்டித்துறை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட குண்டு சம்பவத்தில் இந்த மூன்று சந்தேக நபர்களும் தொடர்புடையவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 5 times, 5 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை