இலங்கை

இலங்கையில் வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற மூன்று கொலை சம்பவங்கள்!

நாட்டில் நேற்றைய தினம் இடம்பெற்ற மூன்று கொலைச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸ் ஊடக பிரிவு தகவல் வௌியிட்டுள்ளது.நேற்று (12) அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் இந்த கொலைகள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொத்துபிட்டிய ரம்புக, பின்னகொடெல்ல பிரதேசத்தில் நேற்று (12) காலை ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியில் வீடொன்றுக்கு அருகில் ஒருவர் காயங்களுடன் உயிரிழந்துள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.குறித்த நபர் பக்கத்து வீட்டு பெண்ணிடம் தவறாக நடந்துக் கொண்டுள்ள நிலையில் பெண்ணின் கணவன் மற்றும் சிலருடன் வந்து பொல்லால் அடித்து கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 45 வயதுடைய நபரே இதில் உயிரிழந்துள்ளார்.

சந்தேகநபர்கள் 28 மற்றும் 35 வயதுடையவர்கள் எனவும் அதே பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.பொத்துபிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, நேற்று இரவு, ரத்கம, ரணபனாதெனிய பிரதேசத்தில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.

ரத்கம, ரணபனாதெனிய பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.இந்த நபர் தென்னை வியாபாரி எனவும், வெளிநாட்டில் உள்ள தனது இளைய சகோதரரின் வீட்டில் வசித்து வந்த நிலையில் இனந்தெரியாத நபரால் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.கொலைக்கான காரணம் அல்லது கொலையை செய்தவர்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் தெரியவராத நிலையில், ரத்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மற்றைய கொலைச் சம்பவம் நேற்று இரவு கல்நேவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.கலங்குட்டிய சந்தனகம வீதியில் இருந்து கல்நேவ கலாஓயா வரையான கிளை வீதியில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக நேற்று இரவு தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.அதன்படி மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது சந்தனகம கலங்குட்டிய பிரதேசத்தை சேர்ந்த 42 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

குடும்ப தகராறு காரணமாக இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கல்நேவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 3 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content