இலங்கை

இலங்கை ஜனாதிபதித் தேர்தல்: தெஹிவளை துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட புதிய தகவல்

தெஹிவளை பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுக்கும் எதிர்வரும் 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கும் தொடர்பில்லை என இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தெஹிவளை நெடிமலை மைதானத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் இன்று 45 வயதுடைய நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

செப்டெம்பர் 15 ஆம் திகதி படோவிட்ட பிரதேசத்தில் நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவங்களுக்கும், செப்டம்பர் 18 ஆம் திகதி தெஹிவளை சரணகர மாவத்தையில் மற்றுமொருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவங்களுக்கும் இன்றைய துப்பாக்கிச் சூடு தொடர்புபட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்கும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கும் தொடர்பில்லை என பொலிஸ் விசாரணைகளில் இருந்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூடு தொடர்பான மேலதிக விசாரணைகளை தெஹிவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

(Visited 3 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்