பிரான்ஸிலிருந்து பிரித்தானியா நோக்கி பயணித்த படகு ஒன்று மூழ்கியதில் மூவர் பலி

பிரான்ஸில் இருந்து பிரித்தானியா நோக்கி பயணித்த படகு ஒன்று மூழ்கியதில், மூவர் உயிரிழந்துள்ளனர்.
புதன்கிழமை அதிகாலை இச்சம்பவம் பாது கலே கடற்கரையில் இருந்து 2 கடல் கிலோமீற்றர் தூரத்தி இடம்பெற்றுள்ளது.
சிறிய காற்று நிரப்பிய படகு ஒன்றில் 50 வரையான அகதிகள் பயணித்த நிலையில், படகு பாரம் தாங்காமல் கடலில் மூழ்கியுள்ளது.
கடற்படையினர் உதவிக்கு அழைக்கப்பட்டு, அவர்கள் மீட்கப்பட்டனர்.
45 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். மூவர் கடலில் மூழ்கி பலியாகியுள்ளனர். இருவர் தேடப்பட்டு வருகின்றனர். அகதிகளில் பலர் பாதுகாப்பு மேலங்கி அணிந்திருக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டில் இதுபோன்ற கடற்பயணங்களில் இதுவரை 50 பேர் பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 25 times, 1 visits today)