இலங்கை

பங்களாதேஷ் பிரஜைகள் மூவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது

போலியான மலேசிய விசாக்களை பயன்படுத்தி மலேசியாவிற்கு தப்பிச் செல்ல முற்பட்ட மூன்று பங்களாதேஷ் பிரஜைகள் இன்று பிற்பகல் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) கைது செய்யப்பட்டுள்ளனர்.

குடிவரவு எல்லை அமலாக்கப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் 41, 37 மற்றும் 19 வயதுடையவர்கள் எனவும், அனைவரும் பங்களாதேஷ் பிரஜைகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் நேபாளத்தின் காத்மாண்டுவில் இருந்து வருகை வீசா மூலம் இலங்கை வந்துள்ளனர்.

அவர்கள் இன்று பிற்பகல் இந்தியாவின் ஹைதராபாத் செல்வதற்காக இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் வந்துள்ளனர்.

விமான நிலைய அனுமதி நடவடிக்கைகளுக்காக அவர்கள் சமர்ப்பித்த விசாக்கள் மற்றும் பிற ஆவணங்கள் குறித்து சந்தேகம் கொண்ட விமான நிலைய அதிகாரிகள், குடிவரவு மற்றும் குடியகல்வு எல்லை அமலாக்கப் பிரிவு அதிகாரிகளிடம் அவற்றைப் பரிந்துரைத்துள்ளனர்.

தொழில்நுட்ப சோதனையில், இந்த மலேசிய விசாக்கள் போலியானது என்பது உறுதி செய்யப்பட்டது.

(Visited 4 times, 1 visits today)
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content