ஆசியா செய்தி

விமானத்தில் பயணிகளுக்கு இடையே மோதல் – மூவர் கைது, இருவருக்கு அபராதம்

மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து சீனாவின் செங்டூ நகரை நோக்கி புறப்பட்ட AirAsia X நிறுவனத்தின் D7326 விமானத்தில் பயணத்தின்போது பயணிகளுக்கு இடையே சண்டை மூண்டது.

ஒரு நபர் விமானப் பயணத்தின் போது ஓய்வெடுக்க விரும்பினார். ஆனால், அவருக்குப் பின்னால் அமர்ந்திருந்த இரண்டு பெண்கள் உரையாடியதைத் தொடர்ந்து, அவர் அமைதியாக இருக்குமாறு கேட்டார். அவர்களால் இது புறக்கணிக்கப்பட்டதால், இருபுறத்திலும் வாக்குவாதம் தீவிரமாகி, அதுவே அடிதடி மோதலாக மாறியது.

இந்த சண்டையின் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியதுடன், விமானச் சிப்பந்திகள் இடையீடு செய்து மோதலை கட்டுப்படுத்த முயன்றனர்.

விமானம் தரையிறங்கியவுடன், உள்ளூர் அதிகாரிகள் தகவலறிந்து நடவடிக்கை மேற்கொண்டனர். சம்பவத்தில் தொடர்புடைய ஐவரில் மூவர் கைது செய்யப்பட்டு, மற்ற இருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

(Visited 3 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
Skip to content