இலங்கை

போலி ஆவணங்களை பயன்படுத்தி வாகன மோசடியில் ஈடுபட்ட மூவர் கைது

வாடகை அடிப்படையில் பெறப்பட்ட வாகனங்களை விற்பனை செய்து போலி ஆவணங்களை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்ட பெண் ஒருவர் உட்பட மூவரை பாணந்துறை குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

பாணந்துறை பிரதேசத்தில் ஒருவரிடமிருந்து வாடகைக்கு எடுக்கப்பட்ட வாகனம் போலியான ஆவணங்களை பயன்படுத்தி விற்பனை செய்யப்பட்டுள்ளதாக முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே இவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து 36 மற்றும் 46 வயதுடைய 2 ஆண்கள், 36 வயதுடைய பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணைகளின் போது, விற்பனை மற்றும் அடகு வைக்கப்பட்ட 02 வாகனங்கள், போலியான சாரதி அனுமதிப்பத்திரங்கள் உள்ளிட்ட பல ஆவணங்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இரு ஆண்களும் தம்புள்ளை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும், கைது செய்யப்பட்ட பெண் பொலன்னறுவை பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!