இலங்கை

12 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்புணர்வு: விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்

மீகொடை பகுதியில் 12 வயதுடைய சிறுமியை கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

குறித்த சிறுமியின் செயற்பாட்டில் மாற்றத்தை அவதானித்த அவர் கல்வி பயிலும் பாடசாலையின் ஆசிரியை இது தொடர்பாக வினவியுள்ளார்.

இதன்போது தாம் இவ்வாறானதொரு சம்பவத்தை எதிர்நோக்கியதாக சிறுமி பாடசாலை ஆசிரியையிடம் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து, குறித்த ஆசிரியர் இந்த விடயம் தொடர்பில் காவல்துறையினரிடம் முறைப்பாடளித்துள்ளார்.

அதன்படி, முறைப்பாட்டுக்கு அமைய மீகொட பொலிஸாரால் சிறுமியை கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் 61 வயதான கொத்தனார் உட்பட மூவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் சிறுமி மூன்று நபர்களால் பல சந்தர்ப்பங்களில் பலாத்காரம் செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!