இலங்கையின் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா?
“இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை.” என்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர Aruna Jayasekara தெரிவித்தார்.
“ஐ.நா. மற்றும் சர்வதேச சட்டங்களுக்கு நாம் உடன்பட்டுள்ளோம். அந்தவகையில் மனிதாபிமானத்துக்கு முன்னுரிமை வழங்கினோம்.
தேசிய பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் பொறுப்புடன் செயல்படுகின்றது. எனவே, தேசிய பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படவில்லை.
நாம் நடுநிலை கொள்கையுடன் செயல்படுவதால் அனைத்து நாடுகளுடனும் இணைந்து செயல்படுகின்றோம்.” எனவும் அவர் கூறினார்.
அதேவேளை, ஈரான் மாலுமிகளின் சடலங்களை விரைவில் ஈரானுக்கு அனுப்புவதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றது என பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேலும் கூறினார்.





