மத்திய கிழக்கு

பணயக்கைதிகள் ஒப்பந்தத்திற்காக ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் டெல் அவிவ் நகரில் போராட்டம்

காஸாவில் ஹமாஸ் படையினரிடம் 14 மாதங்களுக்கு மேலாக பிணைக் கைதிகளாக உள்ளவர்களை மீட்க வேண்டும் என்று இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சனிக்கிழமை (டிசம்பர் 14) நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னணி இஸ்ரேலிய நடிகர் லியோர் அ‌ஷ்கெனாசியும் கலந்துகொண்டார்.

“நாம் தோற்றுவிட்டோம் என்பதை ஒப்புக்கொண்டு, பிணைக் கைதிகளை விடுவிக்க ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும்,” என்று அவர் தெரிவித்தார்.

தமது இரண்டு மகன்களும் இன்னும் பிணைக் கைதிகளாக காஸாவில் உள்ளதாக ஜிக் ஹார்ன் என்னும் நபர் வருந்தினார் .போரை நிறுத்துங்கள். சரியான நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இது, அனைவரையும் வீட்டிற்கு கொண்டுவர வேண்டும், என்று அவர் கூறினார்.

கடந்த சில நாள்களாக இஸ்ரேலுக்கும் காஸாவுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. விரைவில் பிணைக் கைதிகள் பலர் விடுவிக்கப்படலாம் என்று நம்பப்படுகிறது.

அமைதிப் பேச்சுவார்த்தையை வழிநடத்துவதில் முக்கிய அங்கம் வகிக்கும் கத்தாரும் அதை உறுதிப்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஹமாஸ் படையினர் இஸ்ரேலுக்குள் தாக்குதல் நடத்தினர். அப்போது 251 பேரை பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.

பிணைக் கைதிகளில் 117 பேர் விடுவிக்கப்பட்டனர். 62 பேர் இன்னும் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். 34 பேர் ஹமாஸ் கட்டுப்பாட்டில் இருந்தபோது உயிரிழந்தனர்.

(Visited 21 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.
error: Content is protected !!