இலங்கை செய்தி

திருகோணமலையில் இதுவரை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டோர் விபரம்

திருகோணமலை மாவட்டத்தில் 86 ஆயிரத்து 313 பேர் பாதிப்ப!!

திருகோணமலை மாவட்டத்தில் இதுவரைக்கும் 86 ஆயிரத்து 313 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான டபிள்யூ .ஜீ.எம்.ஹேமந்தகுமார  தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் இன்று (06) வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

216 கிராம உத்தியோகத்தர்கள் பிரிவுகளில் 25981 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் மூதூர் பிரதேசத்தில் 42 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளைச் சேர்ந்த 9530 குடும்பங்களைச் சேர்ந்த 31835 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 40 வீடுகள் சேதம் அடைந்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் மூதூர் பிரதேசத்தில் அல் ஹிதாயா வித்தியாலயம், அரபா வித்தியாலயம், அல் ஹிலால் ஆண்கள் பாடசாலை மற்றும் பெண்கள் பாடசாலை ஆகிய இடங்களில் உள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களை தங்க வைத்து அவர்களுக்கு தேவையான அனைத்து தேவைகளையும் நிறைவேற்றி வருவதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

AJ

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!