இலங்கை செய்தி

திருட்டுகள் தொடர்பில் தேட முடியாததால் தகைமைகளை தேடுகிறார்கள் – பிரதமர் ஹரிணி

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் திருட்டுகள் தொடர்பில் தேட முடியாத காரணத்தினால் ஆளும் கட்சி உறுப்பினர்களின் தகைமைகள் பற்றி அறிய எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

இன்று (17) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர் கடந்த அரசாங்கங்களின் எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்களின் ஊழல்கள் பற்றி தேடப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

எங்கள் அரசாங்கத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களின் தகைமைகள் தொடர்பில் பெரும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

இங்கே இருக்கும் நம் பலரின் தகைமைகளை தேடுகின்றனர். தகைமைகளை கேட்கிறார்கள்,அதை கேட்கிறார்கள், இதை கேட்கிறார்கள்.

மிகவும் ஆர்வமாக உள்ளனர். கடந்த காலங்களில் அமைச்சர்கள் மற்றும் அரசாங்கங்கத்தில் உள்ளவர்களின் கல்வித் தகுதிகள் தேடப்படவில்லை என்பது ஒருபுறம் எங்களுக்கு மகிழ்ச்சி. அவர்களின் திருட்டையே தேடினார்கள்.

எங்களின் திருட்டுகள் தொடர்பில் கண்டு பிடிக்க முடியாததால் கல்வித் தகுதியில் இவ்வளவு ஆர்வம் காட்டுவது சற்று முன்னேற்றமாகவே கருதலாம்.’ என்று தெரிவித்துள்ளார்.

(Visited 31 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!