அமைச்சர் சுனில் ஹந்துனெத்தியை கைது செய்யுமாறு தேரர் வலியுறுத்து!
அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி அவசரகால சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட வேண்டும் என்று மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் விகாராதிபதி கலாநிதி. வலவாஹங்குனவெவே தம்மரத்ன தேரர் வலியுறுத்தியுள்ளார்.
விசேட ஊடக சந்திப்பொன்றை இன்று நடத்தியே அவர் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.
“மட்டக்களப்புக்கு சென்றிருந்த அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி, மல்வத்து ஓயா நீர் நிலை தொடர்பில் தவறான கருத்தை வெளியிட்டிருந்தார்.
எனவே, அவரைதான் முதலில் அவசரகால சட்டத்தின்கீழ் கைது செய்ய வேண்டும்.
மல்வத்து ஓயா நீர் தொடர்பில் அவர் முரணான தகவலை வெளியிட்டதால்தான் எமது பகுதியில் பெருமளவு பாதிப்பு ஏற்பட்டது.
அத்துடன், நாடாளுமன்றத்தில் பொய்களை கூறும் அரசியல் பிரமுகர்களும் அவசர கால சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட வேண்டும்.” எனவும் தேரர் குறிப்பிட்டார்.




