இலங்கை செய்தி

பாரதூரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்!! பொன்சேகா சஜித்திற்கு எச்சரிக்கை

முன்னாள் இராணுவத் தளபதி தயா ரத்நாயக்கவை சமகி ஜன பலவேக அமைப்பில் இருந்து நீக்காவிட்டால் பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

அதன்படி கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்ததாக அவர் கூறினார்.

எவ்வாறாயினும், தான் கட்சியை விட்டு விலகப் போவதில்லை எனவும், நியமனத்திற்கு எதிராக செயற்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தயா ரத்நாயக்கவை கட்சியில் இணைத்துக் கொள்வது தொடர்பில் கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவுக்கு கூட உடன்பாடு இல்லை எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இது தொடர்பில் ஹர்ஷ டி சில்வா, எரான் விக்ரமரத்ன, கபீர் ஹாசிம் உள்ளிட்ட பல பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது அதிருப்தியை வெளியிட்டதாக பொன்சேகா மேலும் தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், கட்சியை விரும்பும் எவரையும் ஏற்றுக்கொள்ளும் வகையில் செயற்குழு தலைவருக்கு வெற்று காசோலை வழங்கவில்லை என தெரிவித்தார்.

(Visited 2 times, 1 visits today)
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content