ஐரோப்பா செய்தி

இன ரீதியான கலவரங்களை ஊக்குவித்தாரா அமைச்சர் கோர்டன் ?

வடக்கு அயர்லாந்து ஸ்டோர்மாண்டின் (Stormont) அமைச்சர் கோர்டன் லியோன்ஸ் (Gordon Lyons), தரநிலை கண்காணிப்பு அமைப்பின் கண்டுபிடிப்புகளுக்கு
எந்த ஆதாரமும் இல்லை என தெரிவித்துள்ளார்.

அமைச்சர்களின் நடத்தை விதிகளை அவர் மீறியதாக அந்த அமைப்பு தீர்மானித்தது.

இனரீதியாக தூண்டப்பட்ட கலவரங்களின் போது, சில புலம்பெயர்ந்த குடும்பங்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டதை தொடர்ந்து, ஜூன் மாதத்தில் லியோன்ஸ் வெளியிட்ட ஒரு பேஸ்புக் பதிவு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது.

அந்த பதிவு, கலவரங்களின் போது பதற்றங்களை அதிகரித்திருக்கலாம் என குறித்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அமைதியின்மைக்கும் அந்த பதிவு காரணமாக இருந்திருக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், தன் மீதான குற்றச்சாட்டுகளை லியோன்ஸ் மறுத்துள்ளார்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!