இலங்கை

நிதி நிறுவனமொன்றில் திருட்டு சம்பவம் ;இரண்டு பெண்கள் உட்பட மூவர் கைது!

நிதி நிறுவனமொன்றில் புகுந்து பணத்தை திருடிய சம்பவத்தில் தேடப்பட்டு வந்த இரண்டு பெண்கள் உட்பட மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

புத்தளம் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஜனவரி 31ஆம் திகதி, சிலாபம் பொலிஸ் பிரிவில் உள்ள நிதி நிறுவனமொன்றில் புகுந்து 7,090,939 ரூபாவை திருடியதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் சந்தேக நபரை ஒருவர் நேற்று (04) கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.தெனியாய பிரதேசத்தில் வசிக்கும் 28 வயதுடையவரே கைது செய்யப்பட்டவராவார்.

பின்னர், சம்பவத்திற்கு உதவிய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள இரண்டு பெண்களும் மாதிவெல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் 33 மற்றும் 46 வயதுடைய பஸ்கொட மற்றும் கடுவெல பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!