இலங்கை செய்தி

ரயிலில் இருந்து தவறி விழுந்த இளைஞர் பலி!! ஐந்து லட்சம் ரூபா நட்டஈடு

ஹொரபே புகையிரத நிலையத்திற்கு அருகில் புகையிரதத்தில் இருந்து தவறி விழுந்த கம்பஹா மொரகொட பிரதேசத்தைச் சேர்ந்த மாணவன் தினித் இந்துவர பெரேராவின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஐந்து இலட்சம் ரூபாவை வழங்க ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இவ்வாறான விபத்து தொடர்பில் நட்டஈடு வழங்குவதற்கு சட்ட ரீதியாக எவ்வித அடிப்படையும் இல்லை என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், போக்குவரத்து அமைச்சரின் வேண்டுகோளுக்கு இணங்க, அமைச்சரவை அங்கீகாரத்திற்கு உட்பட்டு, உயிரிழந்த இளைஞனின் குடும்ப உறுப்பினர்களுக்கு உரிய தொகையை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!