இலங்கை செய்தி

இலக்கு மாறியதில் இளைஞரின் உயிர் பறிபோனது

மாத்தறை தெலிஜ்ஜவில பிரதேசத்திலுள்ள தொலைபேசி கடையொன்றில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த நபர் குற்றவாளிகளின் இலக்கு அல்ல என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ, துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களின் இலக்கு குறித்த தொலைபேசி கடையின் உரிமையாளரே என தெரிவித்தார்.

இந்த சம்பவத்தில் கடைக்கு போன் சார்ஜ் செய்ய வந்த 22 வயதான இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இதேவேளை, சந்தேகநபர்கள் சுட பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

திஹகொட நந்துகல அணைக்கட்டு சாய்வான பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டுள்ளது.

இதில் இருந்த பேட்டரி மற்றும நம்பர் பிளேட் ஆகியவை நீக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

(Visited 4 times, 1 visits today)
See also  பிரான்ஸில் இருந்து யாழ்ப்பாணம் வந்தவர் உயிர்மாய்ப்பு
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content