ஐரோப்பா

ஜெர்மனியில் குழந்தைக்கு தந்தை செய்த மோசமான செயல்

ஜெர்மனியில் தந்தை ஒருவர் தனது 3 வயது குழந்தையை கொலை செய்து ஆற்றில் வீசியுள்ளார்.

ஜெர்மனியில் நோற்றின்பிஸ்பாலின் மாநிலத்தில் உள்ள டீஸ்லான் நகரத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த 40 வயதுடைய தந்தை தனது 3 வயதான பெண் குழந்தையை நில அறையில் 3 நாட்களாக அடைத்து வைத்திருந்துள்ளார்.

இவ்வாறு அடைத்து வைக்கப்பட்ட நிலையில் சிறுமியானவர் இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

பின்னர் குறித்த தந்தை ரையில் கெனல் கனால் என்ற ஆற்றில் இறந்த குழந்தையை கல்லால் கற்றி வீசியுள்ளார்.

40 வயதுடைய தந்தையானவர் பொலிஸ் நிலையத்திற்கு சென்று இறந்த மகளை தான் ஆற்றில் வீசியதாக தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் தற்பொழுது பொலிஸார் தந்தையை கைது செய்துள்ளனர். பொலிஸார் குறித்த சிறுமியின் உடலை தேடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனைர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!