உலகின் முதல் வெளிப்படையான ஓரினச்சேர்க்கையாளர் சுட்டுக் கொலை

உலகிலேயே தன்னை ஓரினசேர்க்கையாளர் என்று வெளிப்படையாக அறிவித்த முதல் இஸ்லாமிய மதகுரு இமாம் முஹ்சின் ஹென்ட்ரிக்ஸ் (57) சுட்டுக் கொல்லப்பட்டார்.
தென் ஆப்பிரிக்காவின் தெற்கு நகரமான க்வெபர்ஹா அருகே முஹ்சின் ஹென்ட்ரிக்ஸ் சுட்டுக் கொல்லப்பட்டதாக செய்தி வெளியிட்டுள்ளது.
கொல்லப்பட்ட இமாம் ஒதுக்கப்பட்ட முஸ்லிம்கள் மற்றும் பிற ஓரினச்சேர்க்கையாளர்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் புகலிடமாக கேப் டவுனில் உள்ள வின்பெர்க்கில் அல்-குராபா மசூதியை நடத்தி வந்தார்.
இந்நிலையில் அவர் ஒருவருடன் காரில் இருந்தபோது, ஒரு வாகனம் அவர்களுக்கு முன்னால் நின்று அவர்கள் வழியைத் தடுத்தது. முகத்தை மறைத்த இரண்டு மர்ம நபர்கள் அந்த காரில் இருந்து இறங்கி இமாமின் கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
கொலைக்கான நோக்கம் தெரியவில்லை என்றும் அதுகுறித்து விசாரித்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, சர்வதேச லெஸ்பியன், ஓரினச்சேர்க்கையாளர், இருபாலினத்தவர், திருநங்கைகள் சங்கம் (ILGA) இந்தக் கொலையைக் கண்டித்தது.