இலங்கை செய்தி

பேரிடரால் வீடுகளை இழந்தோருக்கு வீடு அமைக்கும் பணி நாளை ஆரம்பம்!

டித்வா சூறாவளியால் சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டம் நாளை ஆரம்பமாகின்றது.

ரீ பில்டிங் ஸ்ரீலங்கா ‘Rebuilding Sri Lanka’ வேலைத் திட்டத்தின் கீழ் இதற்குரிய நடவடிக்கை இடம்பெறும்.

இதற்கமைய டித்வா சூறாவளியால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகளை நிர்மாணித்தல் மற்றும் இழப்பீடு வழங்கும் ஆரம்ப நிகழ்வு நாளை இடம்பெறும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அனுராதபுரம் மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களில் மாவட்டங்களில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இந்நிகழ்வு இடம்பெறும்.

அனுராதபுரம் மாவட்டத்தில் கல்னேவ, ஹந்துன்கம, ராஜாங்கனய மற்றும் சிறிமாபுர ஆகிய பகுதிகளில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக புதிய வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.

குருநாகல் மாவட்டத்தில் நிகவெரட்டிய, விதிகுலிய சந்தி , ரிதீகம மற்றும் தொடம்கஸ்லந்த ஆகிய பகுதிகளில் வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இந்தப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!