இலங்கை

முக்கிய ஆவணத்தை மென்று துப்பிய பெண் : வழக்கறிஞருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!

வழக்கு ஆவணத்தில் உள்ள ஆவணத்தை மென்று அழித்து, வழக்கறிஞர் தொழிலுக்கு ஒவ்வாத வகையில் நடந்து கொண்ட பெண் வழக்கறிஞரை, வழக்கு முடியும் வரை வழக்கறிஞர் பணியில் இருந்து இடைநீக்கம் செய்ய உயர் நீதிமன்றம் திங்கட்கிழமை (25) தீர்மானித்துள்ளது.

12 வருடங்களாக சட்டத்தரணியாக கடமையாற்றிய பிரதிவாதி சட்டத்தரணியின் செயற்பாடு பாரதூரமான நடவடிக்கையாக கருதப்பட வேண்டுமென பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தெரிவித்துள்ளார்.சட்டத்தரணிக்கு எதிராக தொழில் நெறிமுறைகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் இந்த வழக்கு தாக்கல்செய்யப்பட்டது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, உயர் நீதிமன்ற நீதியரசர்களான காமினி அமரசேகர மற்றும் ஏ.எச்.எம்.டி., நவாஸ் ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழு முன்னிலையில் இந்த மனு பரிசீலிக்கப்பட்டது.

கெக்கிராவ நீதவான் நீதிமன்ற பதிவாளர் காரியாலயத்தில் உள்ள வழக்கு ஆவணமொன்றை வலுக்கட்டாயமாக எடுத்து வாயில் போட்டு அழித்ததன் மூலம் சட்டத்தரணிக்கு தகாத வகையில் நடந்து கொண்ட குற்றச்சாட்டில், பிரதிவாதி சட்டத்தரணிக்கு எதிராக சட்டமா அதிபர் இந்த வழக்கை முன்வைத்துள்ளார்.

வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது முன்வைக்கப்பட்ட வாதங்களை பரிசீலித்த நீதியரசர்கள் குழு, தொழில் நெறிமுறைகளை மீறியதாக வழக்குரைஞருக்கு எதிரான வழக்கை ஏப்ரல் 2ஆம் திகதி விசாரிப்பதற்கு உத்தரவிட்டார்.

(Visited 18 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்