இலங்கை செய்தி

தாயை குணமாக்க வந்து மகளை தீட்டுப்படுத்திய சூனிய வைத்தியர்

தனது தாயின் நோய்களை பேய் சக்தியால் குணப்படுத்துவதாகக் கூறி தனது மைனர் மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சூனிய வைத்தியருக்கு 60 வருட கடூழிய சிறைத்தண்டனையை 20 வருடங்களில் அனுபவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

அந்த சம்பவம் தொடர்பான வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பண்டார பலல்ல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

2013 ஆம் ஆண்டு 38 வயதுடைய இந்த குற்றவாளி, குறித்த சிறுமியை பல சந்தர்ப்பங்களில் பாரிய பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு முறைப்பாடு கிடைத்திருந்தது.

அந்த அதிகார சபையின் அறிவிப்பின் பேரில், சட்டமா அதிபர் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக 3 குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குத் தாக்கல் செய்திருந்தார், மேலும் அவர் 3 குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளி என்று தீர்மானிக்கப்பட்டது.

இந்த சூனிய வைத்தியர் ஆலயம் நடத்தி அசுர பலத்துடன் நோய்களை குணப்படுத்துவதாகவும் ஹொரண பிரதேசத்தில் வசிக்கும் குறித்த பெண்ணும் அங்கு சிகிச்சை பெற வந்திருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த பெண்ணின் வீட்டில் தாற்காலிக ஆலயம் அமைக்க வேண்டும் எனக் கூறிய குற்றவாளி, அதற்கமைவாக அந்த வீட்டுக்குச் சென்று சிறுமியை பல சந்தர்ப்பங்களில் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

(Visited 4 times, 1 visits today)
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content